சினிமா

தீபிகா படுகோன் 2வது முறையாக கர்ப்பம்.. அட்லி படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்று காலை, இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகான புகைப்படம் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

அந்த புகைப்படத்தில், இவர்களது மூத்த மகள் துவா , கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் ‘பாசிட்டிவ்’ ரிசல்ட் காட்டும் பரிசோதனை கருவியை பிடித்திருப்பது போல காட்சியளிக்கிறார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துமழையில் நனைந்து வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, 2024, செப்டம்பர் 8-ம் தேதி துவா பிறந்தார். தற்போது துவா பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், இரண்டாவது குழந்தையின் வருகையை தம்பதிகள் கொண்டாடி வருகின்றனர்.

ரன்வீர் சிங் தற்போது தனது ‘துரந்தர் 2’ படத்தின் மாபெரும் வெற்றியை அனுபவித்து வருகிறார். மறுபுறம் தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் ‘கிங்’ படத்திலும், அல்லு அர்ஜுனுடன் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிஸியான சினிமா வாழ்க்கைக்கு இடையிலும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்