தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றநிலையில் கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கம் முதலே தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வந்தது.
ஒருகட்டத்த்ல் தொடர்ந்து தவெகவே முதலிடத்தில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி என அறிவிக்கப்பட்டது. எனவே, தவெக தலைவர் முதலமைச்சர் பதவியில் அமரவிருக்கிறார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் விஜய் தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அரசியல் விதிமுறைப்படி அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். அதோடு, லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கவும் விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

