தமிழகத்தில் நிர்வாக திறனை மேம்படுத்தவும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாநிலத்தை முன்னெடுத்து செல்லவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எதிர்கால தொழில்நுட்ப தேவைகளைக் கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கென தனியாக ஒரு புதிய துறையை அரசு உருவாக்கியுள்ளது. அத்துடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பத்துறையும் இதனுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை’ அமைச்சராக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக அரசின் இந்த நவீன அணுகுமுறை மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்குச் சிந்தனைக்குத் தமிழக இளைஞர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசு சேவைகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்குவது, லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான ஆன்லைன் நிர்வாக முறையைக் கொண்டு வருவது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மக்கள் குறைகளுக்கு அதிவிரைவாகத் தீர்வு காண்பது ஆகியவற்றை இந்த புதிய அமைச்சகம் முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு திறமையான இளம் அமைச்சரின் கீழ் இந்தத் துறை கொண்டு வரப்பட்டிருப்பது, உலகளாவிய ஐடி நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகத்தை நோக்கி ஈர்க்கவும், லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெரிதும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

