தமிழ்நாட்டின் பின்னலாடை நகரமான திருப்பூரின் முன்னணி ஏற்றுமதியாளர்கள் மத்தியில், புதிய தவெக அரசு எடுத்துள்ள ஊழலற்ற அதிரடி நடவடிக்கைகள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த காலங்களில் திருப்பூரை சேர்ந்த பல தொழில் அதிபர்கள் தங்களின் நிறுவனங்களுக்காக ‘சோலார் மின் உற்பத்தித் திட்டங்களை’ அமைக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், முந்தைய ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சார திட்டத்திற்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு கட்டாயமாகக் ‘கமிஷன் லெட்டர்’ அல்லது மாமூல் தர வேண்டிய அவல நிலை இருந்தது. லஞ்ச பாரம் தாங்க முடியாமல் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் சூரிய ஒளி மின் திட்டங்களையே முழுமையாக கைவிட்டனர்.
ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்றவுடன், இந்த லஞ்ச கலாச்சாரத்திற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சோலார் திட்டங்களுக்கான கமிஷன் நடைமுறை ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் தொழிலதிபர்கள் தங்களின் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களை மீண்டும் தொடங்க உற்சாகம் காட்டி வருகின்றனர்.
அரசின் இந்த தூய்மையான நிர்வாகத்தை பாராட்டியும், முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகவும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒரு குழுவை அமைத்து, முதலமைச்சரின் சந்திப்பிற்காக நேரம் கேட்டுள்ளனர். நேர்மையான மற்றும் வெளிப்படையான தொழில் சூழலை உருவாக்கியுள்ள தவெக அரசின் இந்த நடவடிக்கை, திருப்பூரின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என போற்றப்படுகிறது.

