இந்தியா

திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை: பெ சண்முகம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். பத்திரிகையாளர் சித்ரா லக்ஷ்மணன் உடனான நேர்காணல் ஒன்றை பகிர்ந்துள்ள அவர், எதிர்காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்திற்கு பின்னால் உள்ள காரணங்களை விவரித்துள்ள பெ. சண்முகம், சித்தாந்த ரீதியாக இரு கட்சிகளையும் ஒப்பிட முடியாது என்றாலும், கொள்கை அளவில் இரண்டுமே சமரசங்களை செய்துகொண்டதாக சாடியுள்ளார்.

தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட திராவிடக் கட்சிகள், தங்களின் பழைய விழுமியங்களை கைவிட்டுவிட்டன என்று அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக, சாதிய பாகுபாடுகள் மற்றும் ஆணவ கொலைகள் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக, களத்தில் இறங்கிப் போராடும் மனநிலையை இரு கட்சிகளும் இழந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் கொள்கைகளை தற்கால அரசியலுக்கு ஏற்ப நீர்த்துப்போக செய்துள்ளதாக கூறும் அவர், தங்களை தாழ்த்திக்கொள்ளும் இந்த அரசியல் பயணத்தில் இரு கட்சிகளும் இணையும் சூழல் உருவானால், அது வியப்பிற்குரியது அல்ல என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இக்கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்