கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்குமார். அதன்பின் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். 90களில் கோலிவுட்டின் முக்கிய நடிகராக சரத்குமார் இருந்தார். இவரின் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றது.
தற்போது வயதாகி விட்டதால் சரத்குமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நேற்று தமிழ் 72வது பிறந்தநாளை சரத்குமார் கொண்டாடினர்..
இந்நிலையில்,ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது ஃபிடன்ஸ் பற்றி பேசிய சரத்குமார் ‘என்னோட 18 வயதில் இருந்து நான் ஒர்க் அவுட் செய்கிறேன்.. கிட்டத்தட்ட 53 வருடங்களாக வொர்க் அவுட் பண்றேன்.. இந்த 53 வருஷத்தில் ஒர்க் அவுட் பண்ணாத நாட்கள் என மூணு வருஷத்தை கழிச்சா கூட 50 வருஷமா நான் ஒர்கவுட் பண்றேன்.. ஜிம்முக்கு போனவர்கள் எல்லாம் 10, 15 நாள் போவாங்க.. அப்புறம் நின்னுடுவாங்க.. மறுபடியும் நினைச்சாலும் போக முடியாது.. உடல் ஓய்வு கேட்கும் போது வேண்டாம் சொல்லிட்டா அடுத்த நாளும் உடம்பு வேண்டாம்னுதான் சொல்லும்’ என கூறியிருக்கிறார்.

