விக்ரம் படத்திற்கு பின் கமலால் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான தக்லைப் திரைப்படம் ஒரு வெற்றிப் படமாக அமையவில்லை. அந்த படத்திற்கு பின் இப்போது வரை கமல் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அதேநேரம் சண்டை பயிற்சிய இயக்குனர்கள் அன்பு – அறிவு ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் படத்தில் கமல் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதேபோல் ஹெச்.வினோத் இயக்கத்திலும் கமல் நடிப்பதாக ஒரு படம் பேசப்பட்டது. ஆனால் இரண்டுமே டேக் ஆப் ஆகவில்லை,
இந்நிலையில்தான் அன்பறிவு இயக்கும் திரைப்படம் இன்னும் காலதாமதமாகும் என்பதால் வீர தீர சூரன் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் கமல் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இது தொடர்பான ப்ரீ புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் கல்கி இரண்டாம் பாகத்திலும் கமல் நடிக்கவுள்ளார். அதேபோல் நெல்சன் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்தும் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

