உலகம்

ஆகஸ்ட் 12ஆம் தேதி வானில் ஒரு அதிசய நிகழ்வு.. நேரலை செய்ய நாசா திட்டம்…

வானில் ஒரு அதிசய நிகழ்வாக, வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நிலவு வரும்போது, அதன் நிழல் பூமி மீது படியும் இந்த தருணம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த பிரம்மாண்டமான வானியல் நிகழ்வை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில், நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்ய அதிரடி ஏற்பாடுகளை செய்துள்ளது.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தை முழுமையாக காண முடியும். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் இது பகுதி கிரகணமாகத் தெரியும். இந்த முழு நிகழ்வும் தோராயமாக 4 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சூரிய கிரகணம் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவில் நிகழ்வதால், இந்தியாவில் உள்ளவர்களால் நேரடியாக இதை காண முடியாது. இருப்பினும், விண்வெளி ஆர்வலர்கள் சோகமாக இருக்க தேவையில்லை; நாசா வழங்கும் பிரத்யேக ஆன்லைன் நேரலை மூலமாக உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த அற்புத காட்சியை உங்கள் கண் குளிரக் கண்டு ரசிக்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த