இந்தியா

டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!…

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் பலரும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர்ஹில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை ஒடுக்க டெல்லி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. போராட்டம் வலுப்பெறவே தர்மேந்திர பிரதான் பதவி விலக இருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் மீது டெல்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது. எனவே அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.. இல்லையென்றால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கரப்பான் பூச்சி ஜனதா தளம் அறிவித்தது. ஒருபக்கம் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘குற்ற பின்னணி இல்லாத மாணவர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை டெல்லி மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதேநேரம், குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்