பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் முதல்வர் விஜயால் முன்மொழியப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது மற்றும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்த போக்கு தொடர வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

