விளையாட்டு

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரெல், மருத்துவ மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் கிரிமினல் மிரட்டல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹூக்ளி ஊரக காவல் கண்காணிப்பாளர் குன்வர் பூஷன் சிங் அளித்த தகவலின்படி, தும்துமா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எமாமி சிட்டி பகுதியில் வைத்து பெங்கால் அணியைச் சேர்ந்த இவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், திருமணம் செய்வதாக ஏமாற்றித் தம்மோடு உறவு வைத்துக் கொண்டு, பின்னர் தன்னை தாக்கி மிரட்டல் விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் காவல்துறையை கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு முதல் அவர் தன்னை தவிர்க்க தொடங்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னை அடைத்து வைத்துத் துன்புறுத்தியதாகவும், காயங்கள் ஏற்படுத்தியதாகவும் எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் அபிஷேக் போரெல் இதற்கு முன்பு மறுத்துள்ளார். 2023 முதல் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர், பெங்கால் அணிக்காக முதல்தர போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்