மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர் . தொடர்ந்து *மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், இந்தியன் 2, டிமான்டி காலனி 2* உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
தற்போது ரவி தேஜாவுடன் இணைந்து நடித்துள்ள இருமுடி கட்டு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் வசூலில் ரூ.100 கோடியை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், படத்தைப் பற்றி சமீபத்தில் பேசிய பிரியா பவானி சங்கர், குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணம் ஆகியிருந்தால், இந்நேரம் எனக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும். அதனால் அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், அந்தக் கதாபாத்திரமும் கதை எந்த விதமாக செல்லப் போகிறது என்பதும்தான் என்னுடைய யோசனையாக இருந்தது.
மேலும் படத்தின் கதையை முதன்முதலில் கேட்டபோதே அது தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் கூறினார்.
இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே அது ஆன்மாவைத் தொடும் வகையில் இருந்தது. இயக்குநர் ஸ்கிரிப்டை கொடுத்தபோதே கதை எந்த திசையில் செல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. நான் பேப்பரில் படித்ததும், இயக்குநரிடம் கேட்டதும் எப்படி இருந்ததோ, அதே உணர்வுடன் திரையிலும் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கிய கவலையாக இருந்தது என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

