இலங்கை

பஹல கடுகன்னாவ பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் மேலும் ஒருவர் பலி!

பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆணொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டநிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உயிரிழப்பின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் சுமார் 5 மணித்தியாலங்கள் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் மொத்தம் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்