ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில், வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அவர் கொண்டு சென்றார். தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் சீக்கிரம் ஆட்டமிழந்தாலும், ஆயுஷ் மத்ரேவின் அரைசதமும் வைபவ்-ன் அதிரடியும் இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலைய செய்தது. வைபவ் மொத்தம் 175 ரன்கள் அடித்த நிலையில் அதில் 15 பவுண்டரி, 15 சிக்சர்ஸ் அடங்கும்.
இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது. ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, தனது 6-வது உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
2022 இறுதிப்போட்டியிலும் இந்தியாவே இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

