பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து புதிய சரிவை சந்தித்துள்ளது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா 106 ரன்கள் குவித்து போராடியும், கடைசி ஓவரில் ஷாஹீன் அப்ரிடி ஸ்டம்பிங் செய்யப்பட்டதால் அந்த அணியின் வெற்றி கனவு கலைந்தது.
இந்த தோல்வி முன்னாள் வீரர் கம்ரான் அக்மலைக் கொதிப்படைய செய்துள்ளது. “இப்போதைய நிலையில் நெதர்லாந்து கூட நம்மை தோற்கடித்து டெஸ்ட் அந்தஸ்து பெற நினைக்கும்” என அவர் சாடியுள்ளார்.
மேலும், ஆசிய கோப்பை விவகாரத்தில் பிசிபி தலைவர் மோசின் நக்வியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆறு அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தஸ்கின் அகமதுவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வங்கதேச வீரர் தன்சித் ஹசன் சதம் அடித்து அந்த அணியின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார்.
டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு மீண்டு வர நினைத்த பாகிஸ்தானுக்கு இந்த தொடர் இழப்பு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

