இலங்கை

மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் உடல் பதப்படுத்தும் நிலையத்தில் இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற மற்றும் சுகாதாரச் சீர்கேடான செயற்பாடுகள் தொடர்பாகப் பொலிஸார் மற்றும் நகரசபை இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், உடல்களைப் பதப்படுத்திய பின்னர் அகற்றப்படும் மனித எச்சங்கள் முறையற்ற விதத்தில் வீசப்படுவதாக நீண்டகாலமாகப் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், இன்று (19) காலை குறித்த நிலையத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் மனித உடற்பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்ற கொடூரக் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதேச மக்கள், “குடியிருப்புகள் மற்றும் இராணுவ முகாம் அமைந்துள்ள இப்பகுதியில், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

உடனடியாக இந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தகவலறிந்த மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது குறித்து முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்:

“புகைப்படங்கள் மற்றும் நேரில் பார்த்த ஆதாரங்களின்படி, மனித உடற்பாகங்கள் மிகவும் அலட்சியமான முறையில் மேலோட்டமாகப் புதைக்கப்பட்டுள்ளன. இது ஒரு பாரிய சுகாதாரச் சீர்கேடு.”

“சுகாதார விதிகளை மீறிச் செயற்பட்ட இந்த நிலையத்தை உடனடியாக ‘சீல்’ வைத்து மூடுவதற்குப் பொதுச் சுகாதார அதிகாரிக்குக் கட்டளையிட்டுள்ளேன்.”

“உடல் உறுப்புகளைப் பொது மயானத்திலேயே புதைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம்.

தற்போது நகரசபை சார்பில் மயானத்திற்கு அருகிலேயே நவீன வசதிகளுடன் கூடிய எம்பாமிங் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

பணிகள் முடிந்ததும் இனி அந்த இடத்தில் மாத்திரமே உடல் பதப்படுத்தும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மனிதாபிமானமற்ற முறையில் மனித எச்சங்களைக் கையாண்ட குறித்த தனியார் நிறுவனத்திற்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்