விளையாட்டு

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

மும்பையில் நடைபெறவுள்ள டி20 மும்பை லீக் தொடருக்கான ஏலத்தில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஏஆர்சிஎஸ் அந்தேரி அணி, அர்ஜுனை 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அவருடைய அடிப்படை விலையான 2 லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாகும்.

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்ட அர்ஜுன், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு பெறாத நிலையில், இந்த ஏலம் அவருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில காலங்களாக கோவா மாநில அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன், மும்பை லீக் தொடரில் பங்கேற்க பிசிசிஐ சிறப்பு அனுமதி அளித்துள்ளது. பிசிசிஐ விதிகளின்படி, ஒரு வீரர் 12 மாத காலத்திற்குள் ஒரு மாநில டி20 லீக் தொடரில் மட்டுமே பங்கேற்க முடியும்.

அர்ஜுன் கடந்த ஓராண்டில் வேறு எந்த மாநில லீக் போட்டிகளிலும் விளையாடாததால், அவர் இந்த மும்பை லீக்கில் விளையாடத் தகுதி பெற்றார். தனது ஐபிஎல் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை இந்த குறுகிய கால தொடரின் மூலம் அவர் ஈட்டவுள்ளார்.

ஆல்-ரவுண்டராகத் திகழும் அர்ஜுன், இந்த தொடரில் தனது திறமையை நிரூபிப்பதன் மூலம் ஐபிஎல் போன்ற பெரிய மேடைகளுக்கான வாய்ப்புகளை மீண்டும் உறுதிப்படுத்த முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்