அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி , இவ்வாறு கருத்து தெரிவித்தார் .
மக்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைக் கவனித்துக் கொள்ளும் அரசாங்கமே நாங்கள்,
டித்வா புயல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிய போர்ச் சூழலை எதிர்கொண்டு,
மக்களுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் அதிகளவான நிதியை ஒதுக்கினோம்.
நாட்டின் பொருளாதாரத்தை நாங்கள் வலுப்படுத்தினோம்.
இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எரிபொருள் இறக்குமதியின்போது டொலரின் மதிப்பு அதிகரித்தது.

