உலகம்

பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்… பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும்

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே சீனாவில் உள்ள ஒரு தொலைதூரப் பாலைவனப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் அமைத்து வரும் ஒரு பிரம்மாண்ட அணு ஆயுத ராணுவக் கோட்டையின் சாட்டிலைட் படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தைவான் விவகாரம் நாளுக்கு நாள் வெடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் தைவான் தங்களுக்குச் சொந்தம் எனச் சீனா சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம் சீனாவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை.. நாங்கள் தனி நாடு என்று தைவான் சொல்லி வருகிறது. தைவானுக்கு சப்போர்ட்டாக அமெரிக்காவும் வந்து நிற்கிறது. இந்தப் பதற்றத்திற்கு நடுவே சில சாட்டிலைட் படங்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

சீனாவில் உள்ள பாலைவனப் பகுதியில் அந்நாட்டு அரசு மிகப் பெரிய அணு ஆயுதக் கிடங்கை உருவாக்கி வருகிறதாம். அமெரிக்கா ஒருவேளை சீனாவின் மீது திடீர் அணுஆயுத தாக்குதல் நடத்தினாலும், அதனைத் தாங்கிப் பிடித்து சீனா திருப்பித் தாக்கும் திறனை உறுதி செய்வதற்காகவே இந்த மெகா உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் ஊடகம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் டேட்டாவின்படி, வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஹாமி என்ற இடத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இரண்டு பிரம்மாண்ட ராணுவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலைவனத்தில் இதைச் சுற்றி 80க்கும் மேற்பட்ட ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தப் பகுதியில் பிரம்மாண்ட ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளுடன் சீனா அதிரடிப் பயிற்சிகளில் ஈடுபட்டதும் செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த