ஈரான், சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, பெஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவரும் கப்பல்கள் ஈரானின் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் செல்கிறது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாகவே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரெலும் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வருவது தடைபட்டதால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒருபக்கம், ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவிருக்கிறது.
இந்நிலையில்தான், இனி வரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு சேவை கட்டணத்தை விதிக்க ஈரான் அரசு முடிவு செய்திருக்கிறது. ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம், சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி சுங்க கட்டணமாக பணம் வசூலிக்க முடியாது என்பதால் சேவை கட்டணமாக இந்த தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்மூஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே, ஈரானின் இந்த முடிவு சர்வதேச எரிசக்தி சந்தையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

