கமலுக்கு விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து வெளியான தக் லைப் படம் ஹிட் படமாக அமையவில்லை. அதன்பின் வெளியான கல்கி 2898டி திரைப்படம் ஒரு பேன் இண்டியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அந்தப் படத்திலும் கமல் ஒரு முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், தக் லைப்புக்கு பின் கமல் ஹீரோவாக நடித்த படம் இதுவரை வெளியாகவில்லை.
சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு – அறிவு இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம் வீர தீர சூரன் படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்திலும் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான் விரைவில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறதாம். ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.
தக் லைப் தோல்விக்கு பின் கமல் பற்றிய செய்திகளில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில்தான், அவர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

