உலகம்

27 ஆண்டுகள் கூகுளில் வேலை செய்தவர் ராஜினாமா..

சிலிக்கான் வேலியின் வரலாற்றிலேயே மிக முக்கிய வெளியேற்றமாக, கூகுள் டீப்மைண்ட் மற்றும் கூகுள் ரிசர்ச்சின் தலைமை விஞ்ஞானியான ஜெஃப் டீன் 27 ஆண்டு கால பணிக்கு பின் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 1999-ல் கூகுளின் 30-வது ஊழியராக சேர்ந்த இவர், MapReduce, Bigtable மற்றும் Gemini போன்ற கூகுளின் பல முக்கிய தொழில் நுட்பங்கள் மற்றும் AI அமைப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

பணியிலிருந்து ஓய்வுபெறாமல், தனது நீண்டகால சக ஊழியரான இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் சஞ்சய் கெமாவாட் மற்றும் முன்னணி AI ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ‘டிஸ்கவரி லூப்’ என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பரிசோதனைகளை தானாகவே மேற்கொள்ளும் அமைப்புகளை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஜெஃப் டீனின் பல ஆண்டு கால சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, ‘டிஸ்கவரி லூப்’ நிறுவனத்திற்கு கூகுள் ஒரு ஆதரவு முதலீட்டாளராகவும், கிளவுட் கம்ப்யூட்டிங் பங்காளியாகவும் செயல்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த