கனடாவின் பீல் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இதுவரை 17 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகளை கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்தில், பீல் காவல்துறையின் இந்த விசாரணை ஒரு முக்கியமான படிநிலை என்று தெரிவித்துள்ளார். சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய குற்றச் செயல்களை முறியடிக்க காவல்துறை எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் தெரிவித்தார். மிரட்டல் விவகாரத்தில் காவல்துறையின் இந்த வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

