கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மாறாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது. அதாவது கடந்த மூன்று தேர்தலிலும் வெற்றி பெற்று நரேந்திர மோடியே பிரதமராக நீடித்து வருகிறார்.
கடந்த மூன்று தேர்தலிலும் வட இந்திய மக்கள் பாஜகவையே ஆதரித்து வாக்களித்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த மூன்று தேர்தலிலும் ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவராகவே இருக்கிறார். அவர் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தும் கூட வாக்குகள் காங்கிரஸ் பக்கம் செல்லவில்லை..
இந்நிலையில்தான், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மல்லிகார்ஜுனா கார்கே விரைவில் மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. அடுத்த தலைவருக்கான பரிசீலனை பட்டியலில் பா.சிதம்பரம் பெயரும் அடிபடுகிறது. பா.சிதம்பரத்திற்கு அந்த பதவி சொல்லவில்லை என்றால் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

