இலங்கை

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்திருக்கின்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 12 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள சுமார் 39100 டெங்கு நோயாளர்களில் 25.8% விகிதத்தினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு கொழும்பு மாவட்டம் ‘அதி-அபாய’ மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வைரஸின் தன்மை மற்றும் அதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் போதிய அவகாசம் பெறாமை என்பன இந்நோய் பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாகஇ அண்மையில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இம்முறை டெங்கு பரவல்இ வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 15 முதல் 21 வாரத்தில் அரச தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானங்களை ஏற்பாடு செய்தல். பிரதேச செயலகங்கள் ஊடாக அதி-அபாய வலயத்திலுள்ள வீடுகளைப் பரிசோதனை செய்தல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் பதாதைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் 10 ஆம் தரத்திற்குக் கீழ் உள்ள மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றும்இ மாணவர் எவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பாடசாலை அதிகாரிகளிடம் சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மாவட்ட அரசியல் தலைமைத்துவம்இ சர்வமதத் தலைவர்கள் அரச அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றங்கள், முப்படையினர் பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்