இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதேவேளை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க யோஷித ராஜபக்ஷ இன்று (17) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

