சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவரிடமும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக நேற்று, இவர்களிடம் சுமார் இரண்டரை மணி நேரம் திருவல்லிக்கேணி காவல்துறை விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த முறைகேடு மற்றும் குதிரை பேரம் தொடர்பான பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதால், அரசியல் களத்தில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

