ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பெட்லூரிபாலெம் என்கிற கிராமத்தில் வசித்து வரும் 33 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த சில நாட்களாகவே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார்.. அவரின் வயிற்றை பரிசேரித்த போது அவரது வயிற்றில் பேனா, கரண்டிகள் போன்ற பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்..
அதன்பின் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த 14 பேனாக்கள், 5 மர கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை மருத்துவர்கள் அகற்றியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு PICA Syndrom என்ற பொருளை விழுங்கும் பிரச்சனை உள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

