உலகம்

ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை!.. டிரம்ப்

ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முயற்சியில் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனையை அமெரிக்க விதித்தது. ஆனால் அதை ஈரான் ஏற்கவில்லை.

ஆனால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் இதில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில் ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க முயன்றது. இதையடுத்து ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மீண்டும் மூடிவிட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை பலமுறை எச்சரித்தார். ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம்.. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அது மிகவும் கடுமையாக இருக்கும் என்றெல்லாம் எச்சரித்தார். ஆனால் ஈரானோ கொஞ்சம் கூட பயப்படவில்லை.

இந்நிலையில், ஈரானுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருக்கிறார். பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பினால் ஈரான் தங்களிடம் தொலைபேசியில் பேசலாம் எனவும் அவர் அறிவித்திருக்கிறார். விமானத்தில் 15 மணி நேரம் பயணம் செய்து பாகிஸ்தான் செல்ல தயாராக இல்லை எனவும் ஈரானில் தலைவர்களே இல்லை.. தலைவர்கள் யார் என்றும் தெரியவில்லை’ எனவும் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த