இந்தியா

125 ஆண்டுகள் கழித்து உச்சத்தை தொட்ட வெப்பம்.. எல் நினோ வெறியாட்டம்..

பசிபிக் பெருங்கடலில் நடு மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக மாறும் ஒரு இயற்கையான பருவநிலை மாற்றத் தோற்றப்பாடுதான் எல் நினோ என அழைக்கப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் காற்று வழக்கமான திசைக்கு மாறாக பலவீனமடைவதால் அல்லது திசைமாறுவதால் எல் நினோ உருவாகிறது. எல் நினோ உலகளாவிய வானிலை, காற்று மற்றும் மழைப்பொழிவை கடுமையாகப் பாதிக்கிறது. அதோடு, பல பகுதிகளில் வறட்சி, கடுமையான வெயில் மற்றும் மழை பெய்யாமல் போவதற்கும் எல் நினோ காரணமாக இருக்கிறது.

அதோடு, விவசாயத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெயில் காரணமாக பயிர்கள் காய்ந்துபோய் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனல, உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. உலக வெப்பநிலை உயர்வதோடு தீவிர வெப்ப அலைகளையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்தான், 1901 வருடத்திற்கு பின் 125 வருடங்கள் கழித்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான வெப்பம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. எல் நினோ தாக்கத்தால் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்