விளையாட்டு

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் நட்சத்திரம் அபிஷேக் சர்மா வானவேடிக்கை நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெறும் 47 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 135 ரன்களைக் குவித்தார். இதில் 10 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். அபிஷேக்கின் இந்த அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அதாவது 9 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெயிலுக்கு பிறகு ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 10 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இவருக்கு உறுதுணையாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் 13 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

அபிஷேக்கின் இந்த அசுரத்தனமான பேட்டிங்கை கண்டு சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மைதானத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார். அதேபோல், அபிஷேக்கின் தந்தை ராஜ் குமார் சர்மாவும் தனது மகனின் இந்த வரலாற்று சாதனையைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தார்.

ஹைதராபாத் மைதானமே ‘அபிஷேக்… அபிஷேக்…’ என்ற முழக்கத்தால் அதிர்ந்தது. சன்ரைசர்ஸ் அணி நிர்வாகமும் ரசிகர்களும் இந்த அதிரடி ஆட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்