ஜெயிலர் பட விழாவில் காக்கா – கழுகு கதையை ரஜினி சொன்ன பின் விஜய் ரசிகர்களுக்கு அவர் எதிரியாக மாறிவிட்டார். அந்த படத்திற்கு பின் வேட்டையன் படம் வெளிவந்த போது அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
அதனாலே அந்த படம் தோற்றுப் போனதாக சொல்லப்படுகிறது. தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. இதற்கு ரஜினியும் ஒரு காரணம் என்கிறார்கள். இந்த படம் 100 சதவீதம் ஒரு முழுமையான வெற்றி படமாக இருக்க வேண்டும்.. ஒரு சதவீதம் கூட மிஸ் ஆகக்கூடாது என நெல்சனிடம் ரஜினி கறாராக சொல்லிவிட்டாராம்.
மேலும், கண்டிப்பாக ஜெயிலர் 2 படம் வெளியாகும்போது படத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள். அதற்கு இடம் கொடுக்காத படி படம் அசத்தலாக இருக்க வேண்டும் எனவும் சொல்லிவிட்டாராம். இதையடுத்தே பல காட்சி மீண்டும் ரீஷூட் செய்து வருகிறாராம் நெல்சன்.

