இந்தியா

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டில் மட்டும் #NoDelimitation என்று நாடகம் நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் இது போன்ற கூட்டங்களை நடத்தவில்லை என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறையை ஆதரித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பது ஏன் என்றும் தயாநிதி மாறன் விளாசியுள்ளார்.

தெளிவான கொள்கை இல்லாமல் காங்கிரஸ் கட்சி செய்து வருவது வெறும் மலிவான அரசியல் என்று குறிப்பிட்ட அவர், நச்சுப்பாம்பை போன்ற காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படும் கட்சிகளின் நாடகங்களை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ட்வீட் அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்