இலங்கை

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்!

வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) நேற்று (16) இரவு வந்தடைந்தது.

அதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து VN-671 என்ற விமானமாக இயக்கப்பட்ட ஏர்பஸ் A320 விமானம், நேற்று இரவு 11.02 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது, விமானத்துக்கு இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்திருந்த நீர்பீரங்கி மரியாதையுடன் தொடக்க விமானம் வரவேற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

குறித்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் வந்திறங்கினர்.

அதேவேளையில், இலங்கையிலிருந்து திரும்பும் விமானத்தில் 172 பயணிகள் வியட்நாமுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

புதிய நேரடிச் சேவையின் கீழ், கட்டுநாயக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான விமானங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் – ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் – இயக்கப்படும்.

ஒவ்வொரு விமானப் பயணமும் ஏறக்குறைய நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

இந்த புதிய சேவையைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இலங்கைக்கான வியட்நாமியத் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்