விளையாட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியுடன் பல்வேறு பொறுப்புகளில் இணைந்து பணியாற்றி வந்த அவர், இந்த திடீர் முடிவை எடுத்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி சமீபகாலமாக சந்தித்து வரும் பின்னடைவுகளே பிளமிங் விலகலுக்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் வீரராக தனது பயணத்தை தொடங்கிய பிளமிங், 2009-ஆம் ஆண்டு முதல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

2026-ஆம் ஆண்டு வரை சுமார் 17 ஆண்டுகள் அவர் இந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். சிஎஸ்கே அணியின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீபன் பிளமிங், இவ்வளவு நீண்ட காலத்திற்கு பிறகு விலகியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்