இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்…!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த தண்ணீர் திறப்பு வந்துள்ளது.

கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணியில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீரும் என மொத்தம் 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்