விளையாட்டு

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடர், மகாத்மா காந்திக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்பைக் கவுரவிக்கும் வகையில் இந்தத் தேதியில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த முறை உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், புதிய வடிவமைப்பு முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 12 அணிகள் ஏற்கனவே நேரடியாகத் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இடங்கள் தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் நிரப்பப்படவுள்ளன.

தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், காந்தியின் நினைவாக அக்டோபர் 2ஆம் தேதியைக் தொடக்க நாளாக நிர்ணயிக்க தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்